Friday, December 15, 2006

இம்சை அரசன் ஏர்டெல் பிரிபெய்டு

இப்ப எல்லோர் கையிலும் செல்போன் இருக்குது. அதிக அளவில் மக்கள் உபயோகிப்பது ஏர்டெல் பிரிபெய்டு கனெக்சன் என்று நினைக்கிறேன். சிக்னல் பிரச்சனை இல்லையென்றாலும், பல சமயங்களில் ஏர்டெல் நம்மை எரிச்சலடைய செய்கின்றன..

* பேலன்ஸ் எப்பவும் 40 ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு தடவை கால் பண்ணும் போதும் 'உங்கள் பேலன்ஸ் கம்மியா' இருக்கு என்று போட்டுக்கொடுக்கும். நாம் அவசரமாக போன் செய்ய வேண்டி இருக்கும். அது பாட்டுக்கு சாவகாசமாக 'உங்கள் போனில் பேலன்ஸ் 39 ரூபாய் 90 காசுகள் இருக்கு. உடனே டாப் அப் செய்யுங்க' என்று மெதுவாக சொல்லும். இம்சையப்பா.

* அடிக்கடி ஒரு எஸ்.எம்.எஸ் வரும், அதாவது அவரோட ஹிட்ஸ், இவரோட ஹிட்ஸ், வல்லவன் ஸ்பெஷல், நல்லவன் ஜோக்ஸ்.. அப்படி இப்படின்னு.. நம்முடைய பேலன்ஸே தடுமாறிக்கிட்டு இருக்கும் போது இது மாதிரி மெஸேஜ் பண்ணி, ஒரு டவுன்பஸ்லோடு 15 ரூபா, ஒரு நிமிடம் 6 ரூ, ஒரு மாதம் கட்டணம் 30 ரூபா, இண்டர்நெட் ஒரு நாளைக்கு 20 ரூபா என்று நம்மிடம் உள்ள பைசா எல்லாம் ஏர்டெல்லுக்கே போக வேண்டும் என்ற நப்பாசையில் அது அடிக்கடி கொடுக்கும் இம்சை இருக்கே.. தாங்காது..

* குறைந்த பட்ச ரீசார்ஜ் 200 ரூபாய், டாக் டைம் 4 ரூபாய், ஒரு மாதம் வேலிடிட்டி. அந்த 45 ரூபாயையும் அந்த ஒரு மாதத்தில் தினம் 2 ரூபாய் வாடகை கட்டணமாக (100 எஸ்.எம்.எஸ்க்கும் , கால் சார்ஜ் 50 பைசா பிளான்க்கும்) திரும்ப அவர்களிடமே போய்ச்சேரும். ஸோ, கண்டிப்பா நீங்க அதிலே அவுட் கோயிங் பண்ணனும்னா டாப் அப் போட்டுத்தான் ஆகணும்

* நாம் ஒரு நாள் தாமதமாக ரீசார்ஜ் செய்தால், அதாவது கிரேஸ் பீரியடில் இருந்தால், நம்மை விரோதி போல் பாவிப்பார்கள் பாவிகள்.. நமக்கு வரும் எஸ்.எம்.எஸ் எல்லாம் அரை நாள் அல்லது ஒரு நாள் தாமதமாகத்தான் வந்து சேரும். ஆனால் உடனே 1000த்து, 888 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யுங்க என்று அவங்க அனுப்பும் எஸ்.எம்.எஸ் மட்டும் உடனே நம்மை வந்து சேரும். 2,3 தடவை கால் செய்து மெஷின் நம்மிடம் ஞாபகம் மூட்டும்.

* ஏர்டெல்லில் யார் யாரெல்லாம் மார்க்கெட்டிங் ஆலோசகராக இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அவர் இம்சை அரசனாகத்தான் இருப்பார்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home